ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தந்தை அலி கமேனி கொல்லப்பட்ட வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா கமேனி பலத்த காயமடைந்ததாகவும், அதிலிருந்து அவர் இன்னும் குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஈரான் தலைநகரமான மத்திய டெஹ்ரானில் உள்ள உச்ச தலைவரின் வளாகத்தில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில், மொஜ்தபா கமேனியின் முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும், அவருக்கு ஒன்று அல்லது இரண்டு கால்களும் சேதமடைந்ததாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. குறிப்பாக, இந்தத் தாக்குதலில் அவரது முகம் சிதைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது 56 வயதான மொஜ்தபா கமேனி மனதளவில் விழிப்புடனும், நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


