இந்நிலையில், இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினருடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மேற்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தையில், நீட்டால் இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு, மாணவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர். திரும்ப பெறுதல் ஆகியவற்றுக்கு முடிவு எட்டப்பட்டதாகவும், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது குறித்து மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது எனவும் கரப்பான் பூச்சி ஜனதா பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


