மண் மணக்கும் மதுரை மாநகரம் என்றாலே முதலில் நினைவிருக்கும் வருவது மதுரை மல்லி தான். மதுரை மல்லி என்றாலே தனித்துவமானது என்று பெயர் வந்ததற்கு காரணம் என்னவென்றால் மதுரை மல்லி பூவின் மனம் மற்றும் தன்மை என்று சொல்லப்படுகின்றது. இப்படி தனித்துவமான மதுரையின் மல்லி பூவானது வெளிநாடுகள் முதற்கொண்டு விற்பனை செய்யப்படுகின்றது இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் வரத்தை பொருத்தும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பொருத்தும் மல்லிகை பூவின் விலை ஏறுவதும், இறங்குவதும் இருக்கும். சத்திரப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் மல்லிப்பூ மதுரை சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இதனையடுத்து மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கணிச்சமாக உயர்ந்துள்ளது.அதாவது மதுரை மல்லிகைப் பூவின் விலை 700 லிருந்து 800 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் பிச்சிப்பூ மற்றும் முல்லைப் பூ 800 ரூபாய்க்கும், சம்பங்கி 400 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ், பன்னீர் ரோஸ் 200 ரூபாய்க்கும், செண்டுமல்லி 80 ரூபாய்க்கு, அரளி 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோடை காலத்தில் தற்பொழுது பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதினால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், மகா சிவராத்திரியை முன்னிட்டும் பூவின் விலை உயர்ந்து உள்ளதாகவும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…