Last Updated:
மகா கும்பமேளா குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டதாக 140 சமூக வலைதள கணக்குகள் மீது 13 FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகா கும்பமேளா குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டதாக 140 சமூக வலைதள கணக்குகள் மீது 13 FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் பகுதியில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கி வரும் 26ஆம் தேதி வரை நடைபெற்று இருக்கிறது. 62 கோடிக்கும் அதிகமானோர் கும்பமேளாவில் புனித நீராடியுள்ளதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் கும்பமேளா குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகளை சிலர் சமூக வலைதளங்களில் பரப்புவதாக புகார் எழுந்தது. இதையடுத்து 140 சமூக வலைதள கணக்குகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: மஹா கும்பமேளாவில் விமானக் கட்டணம், தங்குமிடம், போக்குவரத்துக்கு கூடுதல் கட்டணம்…? கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்…!
இதன் ஒரு பகுதியாக 13 பேர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், சிவராத்திரியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதபடி முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டிஐஜி வைபவ் கிருஷ்ணா கூறியுள்ளார்.
February 24, 2025 6:49 PM IST


