• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Maha Kumbh Mela | மகா கும்பமேளா மூலம் ரூ.3 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு…!

GenevaTimes by GenevaTimes
February 21, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
Maha Kumbh Mela | மகா கும்பமேளா மூலம் ரூ.3 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாபெரும் திருவிழாவான மகா கும்பமேளாவில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ரூ.3 லட்சம் கோடி வணிகத்தை ஈட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், இது நாட்டின் மிகப்பெரிய பொருளாதார நிகழ்வாக அமைகிறது என்றும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் சாந்தினி சௌக் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரவீன் கண்டேல்வால் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே இடத்தில் திரண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய மக்கள் கூட்டம் நம்பிக்கைக்கும், பொருளாதாரத்திற்கும் இடையிலான தொடர்பை உறுதியாக நிலைநாட்டியுள்ளது என்று வர்த்தகத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கண்டேல்வால் கூறியுள்ளார்.

மகா கும்பமேளா உள்ளூர் வர்த்தகத்தை ஊக்குவித்து வருவதோடு டைரிகள், காலண்டர்கள், சணல் பைகள் மற்றும் எழுதுபொருட்கள் போன்ற மகா கும்பமேளாவின் முக்கிய தயாரிப்புகளுக்கான தேவையை அதிகரித்து வருகிறது. இந்த விழா கவனமாக விளம்பரம் செய்யப்பட்டதால் விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மகா கும்பமேளா தொடங்குவதற்கு முன்பு, ஆரம்ப மதிப்பீடுகளாக 40 கோடி மக்கள் வருகை தருவார்கள் என்றும், சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள வணிகப் பரிவர்த்தனைகள் நடைபெறும் என்றும் கணித்ததாகக் கண்டேல்வால் குறிப்பிட்டார்.

இருப்பினும், நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களிடம் உற்சாகம் காணப்பட்டதால், பிப்ரவரி 26-ம் தேதிக்குள் கிட்டத்தட்ட 60 கோடி மக்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் மிகப்பெரிய வணிக வருவாய் கிடைக்கும்.

இது உத்தரப்பிரதேசத்தின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளித்துள்ளது மற்றும் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். மகா கும்பமேளாவின் பொருளாதாரத் தாக்கத்தை எடுத்துரைத்த கண்டேல்வால், விருந்தோம்பல் மற்றும் தங்குமிடம்; உணவு மற்றும் பானத்துறை; போக்குவரத்து மற்றும் தளவாடங்கள்; மத உடை; பூஜை சாமகிரி மற்றும் கைவினைப் பொருட்கள், ஜவுளி, ஆடைகள் மற்றும் பிற நுகர்வோர் பொருட்கள்; சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு சேவைகள்; ஊடகம், விளம்பரம் மற்றும் பொழுதுபோக்கு; குடிமை சேவைகள்; தொலைத்தொடர்பு, மொபைல், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பம், சிசிடிவி கேமராக்கள் மற்றும் பிற உபகரணங்கள் உள்ளிட்ட பல வணிகத் துறைகள் பெரிய அளவிலான பொருளாதார நடவடிக்கைகளைக் கண்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: UGC Rules 2025 : யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில அரசின் உரிமையை பறிக்கும் திட்டம் : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

மகா கும்பமேளாவின் பொருளாதார நன்மைகள் பிரயாக்ராஜுக்கு மட்டுமல்ல என்றும் கண்டேல்வால் சுட்டிக்காட்டினார். 150 கி.மீ. சுற்றளவில் உள்ள நகரங்கள் மற்றும் ஊர்களும் குறிப்பிடத்தக்க வணிக எழுச்சியை அனுபவித்து, உள்ளூர் பொருளாதாரங்களை வலுப்படுத்துகின்றன.

கூடுதலாக அயோத்தி, வாரணாசி மற்றும் பிற மதத் தலங்களுக்கு யாத்ரீகர் வருகை அதிகரித்துள்ளது. ஏனெனில், பக்தர்கள் அயோத்தியில் ராமர், வாரணாசியில் சிவபெருமான் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள பிற கடவுளை தரிசனம் செய்து வழிபடுகிறார்கள். இது இந்தப் பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: Rekha Gupta : மாணவர் சங்க தலைவர் To எம்.எல்.ஏ. – டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வானதற்கு என்ன காரணம்?

மகா கும்பமேளா இந்தியாவின் வர்த்தகம், தொழில் மற்றும் கலாச்சார நிலப்பரப்பை நேர்மறையாக வடிவமைக்கும் என்றும், ஒரு புதிய பொருளாதார அளவுகோலை அமைக்கும் என்றும் டெல்லி எம்.பி. கூறியுள்ளார். மேம்பாலம், சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டுவதற்கு என பிரயாக்ராஜின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக உத்தரப்பிரதேச அரசு ரூ.7,500 கோடி செலவிட்டுள்ளது. இந்தச் செலவில் மகா கும்பமேளா ஏற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1,500 கோடியும் அடங்கும்.

First Published :

February 21, 2025 7:02 PM IST

Read More

Previous Post

செவ்வந்தியுடன் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளி: வெளியான புகைப்படம்!

Next Post

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: தென்னாப்பிரிக்கா ஓபனிங் பேட்ஸ்மேன் ரிக்கெல்டன் முதல் ஒரு நாள் கிரிக்கெட் சதம்

Next Post
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: தென்னாப்பிரிக்கா ஓபனிங் பேட்ஸ்மேன் ரிக்கெல்டன் முதல் ஒரு நாள் கிரிக்கெட் சதம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: தென்னாப்பிரிக்கா ஓபனிங் பேட்ஸ்மேன் ரிக்கெல்டன் முதல் ஒரு நாள் கிரிக்கெட் சதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin