Last Updated:
இந்த கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏறத்தாழ 80 பேர் வரை படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது, பின்னால் வந்த மற்றொரு ரயில் மோதிய கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 80 பேர் படுகாயம் அடைந்தனர்.
வடக்கு லண்டனில் இருந்து தெற்கு லண்டனின் St. Pancras நிலையத்திற்கு புறப்பட்ட பயணிகள் ரயில், தெற்கு பெட்ஃபோர்ட் பகுதியில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே வழித்தடத்தில் பின்னால் வந்த மற்றொரு ரயில் ஏற்கனவே நின்றிருந்த ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ரயில்கள் மோதிய வேகத்தில் பெட்டிகளில் அமர்ந்திருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏறத்தாழ 80 பேர் வரை படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. ரயில் விபத்துக்கான காரணம் குறித்து லண்டன் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Jun 20, 2026 12:13 PM IST


