• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

KLCC பகுதியில் ‘புகைப்படத் தரகர்கள்’ மீது அதிரடி நடவடிக்கை : 23 சம்மன்கள் – கேமராக்கள், கைபேசிகள் பறிமுதல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 21, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
KLCC பகுதியில் ‘புகைப்படத் தரகர்கள்’ மீது அதிரடி நடவடிக்கை : 23 சம்மன்கள் – கேமராக்கள், கைபேசிகள் பறிமுதல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கோலாலம்பூர் மாநகர மையப் (KLCC) பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்துச் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் வசூலிக்கும் ‘உலாட் ஃபோட்டோ’ (Ulat Foto) நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கோலாலம்பூர் நகராண்மை கழகம் (DBKL) அதிரடிச் சோதனையை நடத்தியுள்ளது.

‘ஓப் லென்ஸ்’ (Op Lens Series 6/2026) என்ற பெயரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்த ஒருங்கிணைந்த சோதனையில், காவல்துறை, குடிவரவுத் துறை மற்றும் தேசியப் பதிவுத் துறை (JPN) ஆகியவை இணைந்து செயல்பட்டன.

இந்தச் சோதனையின் போது மொத்தம் 23 சம்மன்கள் (Compounds) விநியோகிக்கப்பட்டன. மேலும், சட்டவிரோதப் புகைப்படத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட 28 உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றில் புகைப்படக் கருவிகள், கைபேசிகள் மற்றும் இதர மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு, ஆவணப்படுத்துவதற்காக மாநகராட்சி கிட்டங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டன.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் 7 பேர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்மன் தொகையைச் செலுத்தத் தவறிய 4 பேருக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது 31 நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் நான்கு பேரின் அடையாள ஆவணங்கள் மற்றும் குடியுரிமை நிலையை மேலதிகமாகச் சரிபார்க்க, தேசியப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஆவணங்கள் தற்காலிகமாகப் பெறப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று, கோலாலம்பூர் நகராண்மை கழகம் அதன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

இத்தகைய அனுமதியற்ற புகைப்படத் தரகர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதோடு, போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்துகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நகரின் ஒழுங்கைப் பராமரிக்கவும் இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

இந்த அதிரடி நடவடிக்கை மூலம் KLCC பகுதியைச் சுற்றியுள்ள பொது இடங்களில் அனுமதியற்ற வணிகச் செயல்பாடுகளை முற்றிலுமாக ஒழிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.



Read More

Previous Post

EXPLAINED | EXPLAINED | நிலநடுக்கம் எப்படி சுனாமியாக மாறுகிறது? கடலுக்குள் நடக்கும் மர்மம் இதுதான்! | Japan Earthquake | Tsunami Alert | உலகம் போட்டோகேலரி

Next Post

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

Next Post
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin