Last Updated:
மனிதநேய அடிப்படையில் பல்வேறு துறைகளில் நீதா அம்பானி மேற்கொண்டுள்ள பணிகளுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானிக்கு கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான மனிதாபிமான விருது 2025 வழங்கப்பட்டுள்ளது.
கல்வி, மருத்துவம், கிராமப்புற மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம் மற்றும் விளையாட்டுத் துறைகளில் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீடா அம்பானிக்கு , சமூக சேவை மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக வழங்கப்படும் உயரிய விருதான Kalinga Institute of Social Sciences (KISS) மனிதாபிமான விருது 2025′ வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வரில் உள்ள கலிங்கா சமூக அறிவியல் நிறுவன (KISS) வளாகத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், இலங்கை நோபல் பரிசு வென்றவரான பேராசிரியர் மோகன் முனசிங்கே இந்த விருதை வழங்கினார்.
கல்வி, மருத்துவம், கிராமப்புற மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம் மற்றும் விளையாட்டுத் துறைகளில் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்டு சுமார் 40,000 மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய நீடா அம்பானி, இந்த விருது தனக்குக் கிடைத்த கௌரவத்தை விட, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் முழு குழுவிற்கும் கிடைத்த அங்கீகாரம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். KISS மற்றும் KIIT ஆகிய இரு நிறுவனங்களையும் “கல்வியின் நவீன ஆலயங்கள்” என்று குறிப்பிட்ட அவர், ஒடிசா மண்ணின் கலாச்சாரம் மற்றும் ஜெகந்நாதரின் ஆன்மீகப் பின்னணி குறித்தும் பெருமிதம் கொண்டார்.
குறிப்பாக, மாணவர்கள் தர்மத்தின் பாதையை விட்டு விலகாமல் உழைக்க வேண்டும் என்றும், பெண் குழந்தைகளுக்குச் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர் மாணவர்களின் கண்களில் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தைக் காண்பதாகக் கூறி தனது உரையை அவர் நிறைவு செய்தார்.


