மீன்பிடி தடைக்காலத்தால் கருவாடு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் கருவாடு விலை உயர்ந்துள்ளது. மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் தமிழகத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உள்ள மீனவர்கள் விசைப்படகுகளைக் கரைக்கு ஏற்றிப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கரையோரத்தில் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், மீன்களின் வரத்து இல்லாததால் மீன்களைக் கருவாடாக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கருவாடுகள் பாதிக்கு விலை உயர்ந்து விற்கப்படுகிறது. இதுகுறித்து மீனவர் திரவியம் கூறுகையில், “ஏப்ரல் 15-ம் தேதிக்கு பிறகு கடுமையாக உயர்ந்துள்ளது, அனைத்து நாட்டுப்படகிலும் வரக்ககூடிய மீன் வரத்து தான் ஒரு விசைப்படகில் வரும். இதனால் கருவாடாக மாற்றுவதற்கு மீன்கள் கிடையாது.
தடைக் காலம் இல்லாத நேரத்தில் விசைப்படகுகள் வரும் மீன்களை மீன் தேவைக்கு போக கருவாடாக மாற்றிவந்தோம். கடந்த மாதத்தினை விட இந்த மாதம் ஒவ்வொரு கருவாடும் ரூ.100 வித்தியாசத்தில் விற்க்கப்டுகிறது. ரூ.60-திற்கு விற்ற கருவாடு ரூ.100-க்கும் ரூ.80- திற்கு விற்ற கருவாடு ரூ.120 என பாதிக்கு பாதியாக விலை உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது.
வெளியூரில் இருந்து வரும் கருவாடு வியாபாரிகளும் வேறு வழியின்றி கூடுதல் விலைக்கும் கருவாடுகளை வாங்கி சென்று அவர்களுக்கு லாபம் தரும் விலையில் அங்கு விற்கின்றனர்.
தடைக் காலம் முடிந்த ஜூன் 15-ம் தேதிக்கு மேல் கருவாட்டின் விலை தலைகீழாக குறையும் இன்று ரூ.250-க்கு விற்க்கப்படும் நகரை ரூ.100 க்கு தான் விற்க்கப்படும், தற்போது போல் விலை இருக்காது. மீன்கள் மிச்சம் மிச்சமாக இருக்கும் அப்போது விலை குறையும்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
