மைசூரு தசரா விழாவை இந்தாண்டு தொடங்கி வைக்க புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் பானு முஷ்தக்குக்கு கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆளும் காங்கிரஸ் அரசு தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் பாஜக எம்.எல்.ஏ.வுமான ஆர். அசோகா பேசியிருப்பதாவது: “தசரா ஹிந்துக்களின் பண்டிகை. இஸ்லாமிய மதத்தில், சிலை வடிவ உருவ வடிவ வழிபாடு தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், பானு முஷ்தக் இதைச் செய்தால், அவரது மதத்துக்கு எதிரானதாக அது அமைந்துவிடும்.

