Last Updated:
ஈரான் பகுதியில் எந்த நேரத்திலும் தாக்குதல் வெடிக்கலாம் என்கிற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவரான அயதுல்லா கமேனி, அமெரிக்கத் தாக்குதலுக்கு அஞ்சி பதுங்குழிக்குள் சென்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஈரான் நாடு முன்னே எப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதாரப் பிரச்சனைகளில் சிக்கி உள்ளது. அந்த நாட்டில் விலைவாசி ஏற்றம், பொருளாதாரப் பிரச்சனைகள் உள்ளிட்டவை காரணமாக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதால் பெரும் பதற்றம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருக்கிறது.
போராட்டக்காரர்களை ஈரான் அரசு ஒடுக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகத் தலையிடப் போவதாக அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையே பகை இருந்து வரும் நிலையில், தற்போது மக்கள் போராட்டத்தைக் காரணம் காட்டி அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தயாராகி வருகிறது. இதேபோன்று அணு ஆயுதத் தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
குறிப்பாக இந்தப் பிரச்சனைகளுக்கு ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் முக்கிய காரணம் என அமெரிக்கா கருதுகிறது. இதனால் அவரைக் குறி வைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என ஈரான் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் வான்வெளித் தாக்குதலுக்கு அஞ்சி தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தலைநகர் ஈரானில் உள்ள பாதுகாப்பான நிலத்தடி பதுங்கு குழிக்குள் சென்றுவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Iran vs US : பதுங்கு குழிக்கு சென்ற ஈரான் தலைவர் கமேனி.. வான்வெளி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்..


