Last Updated:
வர்த்தக கப்பல்கள் மற்றும் அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் அடுத்தடுத்து ஏவிய ட்ரோன்களை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்திய காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் 5 மாதங்களைக் கடந்த நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காண்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கா கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அதற்கு இசைவு கொடுக்க ஈரான் மறுத்து வருகிறது. இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற கப்பல்களைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 4 ட்ரோன்களைப் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
BREAKING: Iran says it launched ballistic missiles at Camp Buehring and Ali Al-Salem Air Base in Kuwait, as well as facilities associated with the U.S. Navy’s Fifth Fleet in Bahrain, following what Tehran describes as U.S. strikes on Qeshm and Sirik, according to an IRGC… pic.twitter.com/lmiiTmL1ug
— Hormuz Report (@HormuzReport) June 6, 2026
ஹோர்முஸ் நீரிணை என்பது உலகிலேயே மிக முக்கியமான கடல் வழிப்பாதையாகும், ஏனெனில் உலகிற்குத் தேவையான கச்சா எண்ணெயில் சுமார் 20% முதல் 30% வரை இந்தச் சிறிய இடைவெளி வழியாகவே கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது. ஒருவேளை இந்த நீரிணை மூடப்பட்டால், உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் உடனடியாகத் தடைபட்டு, கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவிற்கு மிகக் கடுமையாக உயரும்.
Jun 06, 2026 11:35 AM IST


