எதிர்வரும் ஐபிஎல் தொடரில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சி.எஸ்.கே. அணியில் UNCAPPED வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா எனப்படும் 18ஆவது ஐபிஎல் போட்டிகள் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் நவம்பர் மாதத்தின் கடைசியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அணி உரிமையாளர்களுடன் ஐபிஎல் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, வரும் 2025 – 2027 ஐபிஎல் சீசனுக்கான விதிகள் முடிவெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இதையும் படிக்க:
ஏலம் முதல் சம்பளம் வரை! 2025 – 2027 ஆம் ஆண்டிற்கான IPL விதிகள் என்ன?
இந்த விதிமுறையில் இடம்பெற்ற 7-ஆவது விதி, மகேந்திர சிங் தோனிக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் இடம்பெற்றுள்ளது. அதாவது, 5 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர், ஏலத்தில் இடம்பெறாமலேயே, குறிப்பிட்ட அணியில் UNCAPPED வீரராக கருதப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ப, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம், கடைசியாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய தோனி, தற்போது பிசிசிஐ-யின் ஒப்பந்தத்திலும் இல்லை.
இந்நிலையில், புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள விதிகளின்படி, அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில், மகேந்திர சிங் தோனி, சி.எஸ்.கே. அணியில் UNCAPPED வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தொடரும் பட்சத்தில், தோனியின் ஊதியம் 12 கோடியில் இருந்து 4 கோடியாக குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
