Last Updated:
ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபாண்டு மார்ச் 28 அன்று துவங்க உள்ளது. தற்போது, 19ஆவது ஐபிஎல் தொடர் நடக்க உள்ளது.
இந்தியாவில் விளையாட்டை வெறும் பொழுதுபோக்காகப் பார்க்காமல் ஒரு உணர்வாகவும், மதமாகவும் கருதுகின்றனர். மற்ற விளையாட்டுகளை விடவும் கிரிக்கெட்டுக்கு பொதுவாக இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட்டை பார்த்து வளருகிறார்கள், நாளடைவில் அவர்களது வாழ்வில் கிரிக்கெட் ஒரு அங்கமாக மாறிவிடுகிறது. பலருக்கு பொழுதுபோக்காகவும், சிலருக்கு வாழ்க்கையே மாற்றி அமைத்த ஒன்றாகவும் கிரிக்கெட் உள்ளது. இந்நிலையில் சச்சின், டோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் இருக்கின்றது.
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிதும் விரும்பப்படும் தொடராக ஐபிஎல் இருந்து வருகிறது. 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடர் இதுவரையிலும் 18 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. தற்போது நடைபாண்டு 19வது சீசன் துவங்குகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கிறது. இதுவரையிலும் சென்னை, மும்பை அணிகள் தலா ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளன. கடந்தாண்டு பெங்களூர் அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. ஆகவே எந்த முறை எந்த அணி கோப்பையை வெளில போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. பெரும் எதிர்பார்ப்போடு ஐபிஎல் தொடரை காண இருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
Salem,Salem,Tamil Nadu

