Last Updated:
ஹர்திக் பாண்ட்யா 23 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாட தொடங்கியுள்ளனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர். இதையடுத்து தொடக்க வீரர்களாக இறங்கிய மும்பை அணியில் வில் ஜாக்ஸ் 1 ரன்னும் ரியான் ரிக்கெல்டன் 37 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து இணைந்த நமன் திர் மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக பார்ட்னர்ஷிப் செய்து ரன்களை உயர்த்தினர். சூர்யகுமார் 21 ரன்களில் ஆட்டமிழக்க அரைச்சதம் கடந்த நமன் திர் 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்தவர்களில் ஹர்திக் பாண்ட்யா 23 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சென்னை அணியில் அன்சுல் கம்பாஜ் 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

