Last Updated:
என்னை கேட்டால் நான் திரிபாதியை சேர்க்க மாட்டேன். அவருக்கு பதிலாக அன்சுல் கம்போஜை உள்ளே கொண்டு வருவேன்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், வெற்றி பாதைக்கு திரும்ப என்னென்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ ஒன்று கிரிக்கெட் ரசிகர் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் நடைபெற்ற பெங்களூருக்கு எதிரான மேட்சிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது.
இதன் அடிப்படையில் 2 புள்ளிகளை மட்டுமே பெற்று சென்னை அணி பாயின்ட்ஸ் டேபிளில் 7-ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. அடுத்து வரும் ஆட்டங்களில் கவனமாக விளையாடினால் மட்டுமே சென்னை அணியால் பிளே ஆப் சுற்றை உறுதி செய்ய முடியும்.
இந்த நிலையில் சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்ப என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருப்பதாவது:
“ஜெமி ஓவர்டனுக்கு பதிலாக டெவோன் கான்வேவை கொண்டு வர வேண்டும். இதே போல் அன்சுல் கம்போஜ் ஆடும் லெவனில் இடம் பெற வேண்டும். அஸ்வினை பொறுத்த அளவில் அவரை அணியை விட்டு நீக்க வேண்டாம். ஆனால் பவர் ப்ளேயில் அவருக்கு ஓவர் கொடுக்கக் கூடாது. 7 முதல் 18 ஓவர்களுக்குள் அஸ்வின் பந்து வீசினால் நல்ல பலனை கொடுக்கும்.
இதையும் படிங்க – IPL 2025 | ஆதிக்கம் செலுத்தும் ஆர்சிபி.. ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடம்!
அவருடன் ஜடேஜா, நூர் அகமது ஆகியோரும் வந்து வீசும் போது எதிரணியை நன்றாக கட்டுப்படுத்த முடியும். என்னை கேட்டால் நான் திரிபாதியை சேர்க்க மாட்டேன். அவருக்கு பதிலாக அன்சுல் கம்போஜை உள்ளே கொண்டு வருவேன். பிளேயிங் லெவனில் சிவம் துபே இருக்க வேண்டும். ஆன்ட்ரே சித்தார்த் இம்பேக்ட் ஆட்டக்காரராக இடம் பெற வேண்டும். முகேஷ் சவுத்ரி கூட நல்லதொரு ஆப்ஷனாக இருப்பார்.” இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
April 02, 2025 10:22 PM IST


