Last Updated:
இரு அணிகளும் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், இன்றைய போட்டியிலாவது பிரகாசிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் இதுவரை தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளன.
இரண்டு அணிகளுமே 2 வெற்றிகளை மட்டும் பெற்று 4 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் முறையே கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.
பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இரு அணிகளுக்கும் மங்கிய நிலையில், இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
இரு அணிகளும் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், இன்றைய போட்டியிலாவது பிரகாசிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.
இதற்கிடையே சேப்பாக்கத்தில் இந்த போட்டியை காண வரும் ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டை வைத்திருப்பவர்கள், மெட்ரோ ரயிலில் ஒரு முறை சென்று திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள். இந்த சலுகையை பெறுவதற்கு டிக்கெட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க -BCCI | “பாகிஸ்தான் அணியுடன் போட்டிகள் இல்லை…” – பிசிசிஐ துணைத் தலைவர்
டிக்கெட்டில் உள்ள க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்வதன் மூலமாக ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் என்ட்ரி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்வோர் அதற்கு அருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும்.
சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
April 25, 2025 2:23 PM IST


