Last Updated:
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிட்டல் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோ மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து தொடக்க வீரர்களாக லக்னோ அணியின் ஏடன் மார்க்கம் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சிறப்பாக விளையாடிய மார்க்ரம் 33 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 52 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 9 ரன்களில் வெளியேறினார். அப்துல் சமது 2 ரன்களில் ஆட்டம் இழக்க அரைச்சதத்தை நெருங்கிய மார்ஷ் 36 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
டேவிட் மில்லர் 14 ரன்களும் ஆயுஷ் பதோனி 36 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்த லக்னோ அணி 159 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். தொடக்க வீரர் கருண் நாயர் 15 ரன்கள் எடுத்திருந்தபோது மார்க்ரம் சுழலில் போல்ட் ஆகி வெளியேறினார்.
பின்னர் இணைந்த அபிஷேக் போரல் – கே. எல். ராகுல் இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
போரல் 36 பந்துகளில் ஒரு சிக்சர் 5 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்தார். பின்னர் இணைந்த ராகுல் – அக்சர் படேல் இணை பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது.
ராகுல் 57 ரன்களுடனும் அக்சர் படேல் 34 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர் . 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்த டெல்லி அணி வெற்றி இலக்கை எட்டியது.
April 22, 2025 11:32 PM IST


