Last Updated:
ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்டு பேட்டிங்கில் மோசமாக விளையாடுவதால் ரிஷப் பந்த்திற்கே மனதளவில் அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சொந்த மைதானமான வான்கிடேவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் லக்னோவை எதிர்கொள்கிறது மும்பை அணி.
முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த மும்பை அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் நடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று மும்பை அணி 10 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஏற்கனவே 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை அணி சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக், சூர்யகுமார் உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் கடந்த சில போட்டிகளில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் 4-6 ஓவர்களில் மும்பை எதிரணிக்கு அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விடுகிறது. மீதம் உள்ள 5 போட்டிகளில் மும்பை 3 அல்லது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்று உறுதி செய்யும்.
இந்நிலையில் சொந்த மைதானமான வான்கிடேவில் நடைபெறும் போட்டியில் மும்பை அணி லக்னோவை எதிர்கொள்கிறது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய லக்னோ, தற்போது வெற்றி தோல்விகளை மாறி மாறி எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துடைய பேட்டிங் ஃபார்ம் அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ அணியில் ரிஷப் பந்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் ஓரளவு திறமையாக விளையாடி வெற்றியை உறுதி செய்கின்றனர். ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்டு பேட்டிங்கில் மோசமாக விளையாடுவதால் ரிஷப் பந்த்திற்கே மனதளவில் அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க – CSK | “சரியான வீரர்களை தேர்வு செய்யவில்லை…” – ஸ்டீபன் ஃபிளமிங் ஓபன் டாக்
இந்த சூழலில் ரிஷப் இன்று கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்த ஆட்டம் மாலை 3.30 மணியளவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் மும்பை வெற்றி பெற்றால் 3 ஆம் இடத்திற்கும், லக்னோ வெற்றி பெற்றால் 4 ஆம் இடத்திற்கும் நெட் ரன் ரேட் அடிப்படையில் முன்னேறும்.
April 27, 2025 2:48 PM IST


