Last Updated:
சிஎஸ்கே ஐபிஎல் 18 வது சீசனில் 5 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்று பரிதாப நிலையில் உள்ளது. கேப்டன் ருத்துராஜ் காயம் காரணமாக விலகிய நிலையில் தோனி கேப்டனாகி, கேகேஆருக்கு எதிராக தோல்வி அடைந்தது.
ஐபிஎல் தொடரின் 25 ஆவது போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 9 விக்கெட்களை இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது.
ஐபிஎல் 18 வது சீசனில் சிஎஸ்கே தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. சென்னை 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் பரிதாப நிலையில் உள்ளது. கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்து இருந்தது.
ருத்துராஜ் கெய்க்வாட் விலகி நிலையில் கேப்டன் பொறுப்பு மகேந்திர சிங் தோனிக்கு வழங்கப்பட்டது. தோனியின் கேப்டன்ஷிப்பில் சிஎஸ்கே அணி கம்பேக் கொடுக்கும் என சேப்பாக்த்தில் ரசிகர்கள் குவிந்தனர். தோனியின் கேப்டன்ஷிப் சேப்பாக்கம் அதிர போகிறது என்று ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு சோகமே மிஞ்சியது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பாதாளத்திற்கு சென்று விட்டது.
சேப்பாகத்தில் நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.சிஎஸ்கே அணியில் ருத்துராஜ்க்கு பதிலாக திரிபாதியும் முகேஷ் சவுதிரி பதிலாக அன்சுல் கம்போஜ் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
சிஎஸ்கேவின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா – டெவான் கன்வே களமிறங்கினர். கம்பேக் கொடுக்கும் என்று நினைத்த சிஎஸ்கே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து அதிர்ச்சி கொடுத்தது. 72 ரன்களுக்கு சிஎஸ்கே 7 விக்கெட்களை இழந்து இருந்த நிலையில் 9 ஆவது வீரராக மைதானத்திற்குள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வீறுநடை போட்டு வந்தார். தோனி ஒன்று அல்லது இரண்டு பவுண்டரிகளையாவது அடித்து ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பார் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால் 4 பந்துகளில் 1 ரன் மட்டும் சுனில் நரைன் பந்துவீச்சில் அவுட்டாகி வந்த வேகத்தில் மீண்டும் பெவிலியன் திரும்பினார். இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.
Chennai,Tamil Nadu
April 11, 2025 9:36 PM IST


