Last Updated:
அடுத்து வரும் போட்டிகளில் தற்போது டாப் 6 இடங்கள் பங்கேற்கும் ஆட்டங்கள் மிகுந்த விறுவிறுப்பாக அமையும்.
ஐபிஎல் தொடரை இந்த முறை வெல்லும் அணி எது என்பது குறித்த கேள்விக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் விமர்சகருமான யுவராஜ் சிங் பதிலளித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணிகளும் குறைந்தது 8 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. அடுத்த வார இறுதிக்குள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு எந்த அணிகள் செல்லும் என்பது ஓரளவு தெரிந்து விடும்.
தற்போதைய சூழலில் சென்னை அணி தரவரிசையில் கடைசி இடத்தில் உள்ளது. மீதம் 5 போட்டிகள் உள்ளள நிலையில், இன்னும் ஒரு போட்டியில் சென்னை தோல்வியடைந்தால் தொடரிலிருந்து வெளியேறி விடும். ராஜஸ்தான் அணிக்கும் இதே நிலைமை தான் உள்ளது.
8 ஆவது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் அணி 6 புள்ளிகளை பெற்றுள்ளது. மீதம் உள்ள 5 போட்டிகளிலும் அந்த அணி வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். முதலில் 18 புள்ளிகளை எந்த அணி பெறுகிறதோ அது ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்து விடும்.
இந்த மூன்று அணிகள் பெரும்பாலும் வெளியேற வாய்ப்புகள் உள்ளன. மீதமுள்ள 7 அணிகளுக்கு இடையேதான் ப்ளே ஆஃப் தகுதி பெறுவதில் போட்டி காணப்படலாம்.
இதனால் அடுத்து வரும் போட்டிகளில் தற்போது டாப் 6 இடங்கள் பங்கேற்கும் ஆட்டங்கள் மிகுந்த விறுவிறுப்பாக அமையும். இந்நிலையில் நடப்பு சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது குறித்த கேள்விக்கு யுவராஜ் சிங் பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க – IPL 2025 | 3 மணிநேரத்தில் ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்திய விராட் கோலி..!
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் எனது விருப்பமான அணி. ஆனால் பஞ்சாப் தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். இந்த முறை பஞ்சாபின் ஆண்டாக அமையலாம் என்று கூறியுள்ளார்.
April 28, 2025 5:35 PM IST


