நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயேதான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 22ஆம் தேதி சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டியுடன் தொடங்கவுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்டிருந்த ஐபிஎல் அட்டவணை முழுமையாக இல்லாமல் ஏப்ரல் 7ஆம் தேதி வரையிலான போட்டிகளுக்கு மட்டுமே இருந்தது.
நாடு முழுவதும் தேர்தல் நடைபெறுவதால், மீதமுள்ள போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படலாம் எனவும், தேர்தல் தேதி வெளியானவுடன் அதற்கேற்றவாறு தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் இருவேறு தகவல்கள் பரவின.
இதையும் படிங்க:
CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு… ரூ.1700 முதல் ஆன்லைனில் விற்பனை
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்திற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தேர்தல் நடைபெற்றாலும், அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெறும் என ஜெய் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால், முழுமையான போட்டி அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…