உலகக்கோப்பை டி20 தொடருக்கு தயாராகுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிச் சென்று வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ள அதிரடி கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
வழக்கம்போல நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் மோதும் இந்த தொடரில் மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் வெளியேறி விட்டன.
இதைத் தொடர்ந்து லக்னோ, டெல்லி அணிகளும் விரைவில் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுதினம் நடைபெறவுள்ள பெங்களூரு – சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில், பெங்களூரு தோல்வியடைந்தால் அந்த அணி வெளியேறும்.
ஏற்கனவே கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடுவதை உறுதி செய்துள்ளன. இதற்கிடையே, ராஜஸ்தான் அணி தான் விளையாடிய கடைசி 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் இங்கிலாந்தை சேர்ந்த வீரர்கள், உலகக்கோப்பை தொடருக்கு தயார் ஆகுவதற்காக தாய் நாடு புறப்பட்டு சென்றுள்ளனர். இது ஐபிஎல் அணிகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர், கொல்கத்தாவின் பில் சால்ட், பெங்களூருவில் வில் ஜாக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து திரும்பியுள்ளனர்.
இந்த வீரர்கள் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். தற்போது இந்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் (பெங்களூரு இன்னும் உறுதியாகவில்லை) விளையாடவுள்ள நிலையில் இங்கிலாந்து வீரர்களின் விலகல் அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் ஏற்பட்டுள்ள இந்த தொய்வை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது எக்ஸ் பக்கத்தில், ‘ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடுங்கள்… இல்லாவிட்டால் விளையாட வராதீர்கள்’ என்று அதிரடியாக பதிவிட்டுள்ளார்.
Either be available for full season or don’t come!
— Irfan Pathan (@IrfanPathan) May 15, 2024
இர்பான் பதானின் கருத்தை ஆதரித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் கமென்டுகள் இந்த பதிவுக்கு குவிந்து வருகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)