Last Updated:
International Roaming | அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக ஏர்டெல் நிறுவனம் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஏர்டெல் சமீபத்தில் புதிய இன்டர்நேஷனல் ரோமிங் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.4000-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரோமிங் பிளான் மொத்தம் 189 நாடுகளில் பயனளிக்கிறது. 189 நாடுகளிலும் 5 ஜிபி அளவிலான டேட்டா ஆக்சஸை நம்மால் பெற முடியும். இதன் மூலம் அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு இந்த புதிய பிளான் மிகவும் உகந்ததாக இருக்கும்.
இந்தியாவில் இந்த பிளானை நீங்கள் ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, 100 நிமிடங்கள் வரை வாய்ஸ் கால் வசதி மற்றும் இன் ஃபிளைட் கனெக்டிவிட்டியும் அளிக்கப்படுகிறது. மேலும், தங்களுடைய பிளான் பற்றிய விவரங்களை வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் செயலியின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அடிக்கடி பயணத்தை மேற்கொள்ளும் பயனாளிகளின் நேரத்தை சேமிப்பதற்காக தானியங்கு புதுப்பிக்கும் (Auto Renewal) வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏர்டெல் இந்த 4,000 ரூபாய் மதிப்பிலான இன்டர்நேஷனல் ரோமிங் பிளானை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது, இதன் வேலிடிட்டி ஒரு வருடம் ஆகும். 189 நாடுகளிலும் 5 ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக ஏர்டெல் நிறுவனம் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக விமான நிலையங்களில் இ-சிம் (e-SIM) மற்றும் டிராவல் சிம் (Travel SIM) ஆகியவை விமான நிலையங்களில் வழங்கப்படுகின்றன. இதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது அடையாள ஆவணங்களை அளித்தாலே போதுமானது, உடனடியாக உங்களது சிம் ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும். மேலும், இந்த சிம் கார்டுகளை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களுக்கு கூடுதலான அளவிலான டேட்டா கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிளான் வேலிடிட்டி மற்றும் யூசேஜ் என அனைத்தையும் ஏர்டெல் தேங்க்ஸ் செயலியின் மூலமே பார்த்துக் செய்து கொள்ளலாம். இந்த புதிய 4,000 ரூபாய் மதிப்பிலான இன்டர்நேஷனல் ரோமிங் பிளான் 180 நாடுகளில் டேட்டா அக்சஸ் வசதியை வழங்குகிறது. மேலும், கூடுதலாக 250 எம்பி அளவிலான இன்ஃபிளைட் கனெக்டிவிட்டியையும் வழங்குகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஏர்லைன்களில் வாடிக்கையாளர்கள் அழைப்புகளை மேற்கொள்ளவும், எஸ்எம்எஸ் அனுப்பவும் இணைய வசதியை பயன்படுத்த முடியும்.
மேலும், இதற்காக 24*7 வாடிக்கையாளர் சேவை மையங்கள் உதவிக்காக எப்போதும் உதவுவதற்கு தயாராக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தான் ஏர்டெல் நிறுவனம் ரூ.451 மதிப்புடைய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதன் வேலிடிட்டி 30 நாட்களாகும். ஒட்டுமொத்தமாக 50 ஜிபி அளவிலான டேட்டா வசதியை இது அளிக்கிறது. மேலும், இத்திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டியுடைய ஜியோ ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
April 30, 2025 5:26 PM IST
International Roaming | புதிய இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்… இந்தியா உள்ளிட்ட 189 நாடுகளில் அறிமுகப்படுத்திய ஏர்டெல்…!


