நாராயணமூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பல்வேறு மோசமான செயல்பாடுகளால் பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் பங்குதாரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனம், ரூ.5.89 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் இருக்கிறது. ஐடி ஜாம்பவான் நாராயணமூர்த்தியின் பல்வேறு திட்டங்களால் அடிக்கடி தலைப்புச் செய்தியில் இடம்பெறும் இன்ஃபோசிஸ் நிறுவனம், தற்போது கனடா அரசால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த டிச.31, 2020ஆம் ஆண்டிற்கான பணியாளர் சுகாதார வரியை குறைவாக செலுத்தியதால், கனடா அரசு இந்திய மதிப்பில் சுமார் ரூ.82 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மேலும் படிக்க: ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் ஐபிஓ ஒதுக்கீடு நிறைவு – யார் யாருக்கு கிடைத்திருக்கிறது?
இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு கனடா அரசாங்கம் விதித்துள்ள அபராதத்தால், பங்குதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், நிறுவனத்தின் நிதி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் எந்தவிதமான தாக்கமும் இல்லை என இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், பங்குதாரர்களின் அச்சத்தையும் தாண்டி, இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்ஃபோசிஸ் பங்குகள் ஏற்றத்துடனே தொடங்கியுள்ளன.
.
&w=750&resize=750,375&ssl=1)
