அவருடன் ஜோடியாக களமிறங்கிய அபிஷேக் சர்மா முதல் அரைசதத்தைப் பூர்த்தி செய்யும் வரை நிதானமான ஆட்டத்தை ஆடினார். அவருக்கு பார்ட்னராக மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் ஈடுகொடுத்து ஆடிக்கொண்டு வந்தார். அபிஷேக் சர்மா முதல் 50 ரன்களைக் கடந்ததும் அதிரடியாக ஆடத் தொடங்கினார். அபிஷேக் சர்மா, 46 ரன்களில் 100 ரன்கள் எடுத்து புதிய சாதனையைப் படைத்தார். அதாவது முதல் 33 பந்துகளில் அரைசதம் அடித்த அபிஷேக், வெறும் 13 பந்தில் சதமடித்தார். முதல்முறையாக டி20 போட்டியில் இன்று களமிறங்கிய அபிஷேக் சர்மா தனது முதல்போட்டியிலேயே சதம் அடித்ததுமட்டுமின்றி, குறைவான பந்துகளில் சதம் அடித்த என்ற வரலாற்றைப்படைத்த மூன்றாவது வீரர் ஆனார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடக்கம் ஆகும். ஆனால், நூறாவது ரன்னுக்கு அடுத்து ஒரு ரன்கூட அவரை ஒரு ரன்கூட எடுக்கவிடக் கூடாது எனும் வகையில் பந்துவீசிய, ஜிம்பாப்வே வீரர் மசகட்ஸாவின் பந்தில், மயெரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

