Last Updated:
எரிமலை வெடித்து சிதறிய பகுதியில் 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுளது.
இந்தோனேசியாவின் ஹால்மஹேரா தீவில் டுகோனோ எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் சிங்கப்பூரை சேர்ந்த 2 பேர் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வட மலுக்கு மாகாணத்தில் அமைந்துள்ள டுகோனோ எரிமலை வெள்ளிக்கிழமை அதிகாலை வெடித்து சிதறியது. இதனால் வானில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாம்பல் மற்றும் புகை பரவியது. இதில் சிக்கி அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூரை சேர்ந்த 2 பேர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
Three hikers have been killed after Indonesia’s Mount Dukono erupted, spewing ash around 10 kilometres into the air.
Authorities have launched a rescue mission to try and retrieve the bodies. pic.twitter.com/xNxLTJ7umw— Al Jazeera English (@AJEnglish) May 8, 2026
இதனை, வடக்கு ஹல்மஹேரா பொலிஸ் மா அதிபர் எர்லிக்சன் பாசரிபு உறுதிப்படுத்தியுள்ளார். அந்த பகுதியில் மேலும் 17 பேர் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினரும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எரிமலை வெடித்து சிதறிய பகுதியில் 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என இந்தோனேசிய எரிமலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
May 09, 2026 10:00 AM IST
திடீரென வெடித்துச் சிதறிய எரிமலை… மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தோருக்கு நேர்ந்த சோகம்!


