இந்தியாவின் இந்தத் திட்டம், இந்தியர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்தாலும்கூட இது முற்றிலுமான நிரந்தர தீர்வாக இருக்காது. ஹோர்முஸ் நீரிணை வழியாக வரும் எரிசக்திகளே, இந்தியாவிற்கான எளிய தீர்வு. ஏனெனில் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது, இதில் கணிசமான பகுதி வளைகுடா நாடுகளில் இருந்துதான் வருகிறது. ஹார்முஸ் நீரிணை முடங்கினால், இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கும். இது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தி, பணவீக்கத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், ரூபாயின் மதிப்பு பாதிக்கப்படலாம். வர்த்தப் பற்றாக்குறையும் அதிகரிக்கக்கூடும். எனவே ஹார்முஸ் நீரிணையே இந்தியாவிற்கு சிறந்த வழி.


