Last Updated:
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 10 ஆம் தேதி டெல்லியில் தொடங்கவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்றுள்ள முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2 ஆவது போட்டி வரும் 10 ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் தொடங்கவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி அகமதாபாத்தில் நேற்று முன்தினம் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல். ராகுல், ரவிந்திர ஜடேஜா மற்றும் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் ஆகியோர் சதம் அடித்தனர். 128 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டை இழந்திருந்தபோது 448 ரன்கள் எடுத்த டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 286 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறினர். அந்த அணியில் அலிக் அதானசே 38 ரன்களும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 25 ரன்களும், ஜேடன் சீல்ஸ் 22 ரன்களும் எடுத்தனர்.
2 ஆவது இன்னிங்ஸில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சதம் அடித்த்டன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவிந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 10 ஆம் தேதி டெல்லியில் தொடங்கவுள்ளது.
October 04, 2025 2:26 PM IST


