Last Updated:
IND vs SL | ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர்-4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர்-4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
துபாயில் நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா 61 ரன்கள், திலக் வர்மா 49 ரன்கள், சஞ்சு சாம்சன் 39 ரன்கள் எடுத்தனர். இறுதிக்கட்டத்தில் இறங்கிய அக்சர் படேல் தன் பங்கிற்கு 21 ரன்கள் சேர்த்தார்.
203 எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் நிசாங்கா அதிரடியாக ஆடி சதம் விளாசினார். குஷல் பெரேரா அவருக்கு துணையாக 58 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி இலக்கை நெருங்க நெருங்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதற்கேற்ப, கடைசி பந்தில் இலங்கையின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 ரன்கள் மட்டும் சேர்த்ததால் போட்டி டிரா ஆனது.
இதனை அடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு இலங்கை அணியை 2 ரன்களில் கட்டுப்படுத்தினார். 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இந்திய வீரர் சூர்யகுமார் முதல் பந்திலேயே 3 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார்.
இதன் மூலம் டி20 போட்டியின் சூப்பர் ஓவர் சுற்றில் இந்தியா தோற்றதே இல்லை என்ற வரலாற்றுச் சாதனை தொடர்கிறது. இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இறுதிப் போட்டியில் நாளை பாகிஸ்தானுடன் மோத உள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
September 27, 2025 6:33 AM IST


