Last Updated:
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்லும். தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
இதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர். இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்லும். தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சண்டிகரில் நடந்த 2 ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்ட நிலையில், தர்மசாலாவில் நடந்த 3ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 2-க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.
4 ஆவது போட்டி பனி காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று 5 ஆவது போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.


