Last Updated:
இந்தியா தென் ஆப்ரிக்கா இடையிலான 2வது டி20 முலான்புர் மைதானத்தில் இன்று நடக்கிறது. ஹர்திக் பாண்ட்யா 100 விக்கெட் சாதனைக்கு நெருக்கம். அர்ஷ்தீப் சிங், பும்ரா முன்னிலையில் உள்ளனர்.
இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நியூ சண்டிகர் முலான்புர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. கட்டாக்கில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் முலான்புரில் உள்ள மைதானத்தில் 2வது போட்டி நடைபெறுகிறது. இது இங்கு நடைபெறும் முதலாவது சர்வதேச போட்டியாகும்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில், சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் ஆகியோர் தொடர்ந்து மோசமாகவே விளையாடி வருகின்றனர். அபிஷேக் சர்மாவும் கடந்த போட்டியில் சரியாக விளையாட நிலையில், அவருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஹர்திக் பாண்ட்யா கடந்த போட்டியில் அரை சதம் விளாசி, வெற்றிக்கு வித்திட்ட நிலையில், இன்றைய போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினால், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்த வரிசையில் முதல் இடத்தில் அர்ஷ்தீப் சிங்க்கும், 2வது இடத்தில் பும்ராவும் உள்ளனர்.
தென் ஆப்ரிக்காவைப் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் மூத்த வீரர்கள் டிகார், மில்லர், மார்க் ரம் மற்றும் இளம் வீரர்கள் ஸ்டப்ஸ், பிரேவிஸ் ஆகியோர் ரன் எடுக்க சிரமப்பட்டனர். இந்தியாவின் சுழற்பந்தை இன்றைய போட்டியிலும் அவர்கள் சமாளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எளிதாக பெற்ற நிலையில் அதே வீரர்களே இந்திய அணியில் களமிறங்க அதிக வாயப்புள்ளது. அதே வேளையில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பாதைக்கு திரும்ப அணியில் சில மாற்றங்கள் செய்யவும் வாய்ப்புள்ளது.
முலான்புர் மைதானத்தில் பனிமூட்டம், பனி இருக்கும் நிலையில், 2வது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றிக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
December 11, 2025 6:52 AM IST


