Last Updated:
தர்மசாலா டி20யில் தென்னாப்பிரிக்கா 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மார்க்கம் 61 ரன்கள். இந்தியா 118 ரன்கள் இலக்கு. ஹர்ஸ்திப், ஹர்ஷ்சித், குல்தீப், வருண் தலா 2 விக்கெட்.
இந்திய அணிக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்கம் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டி20 போட்டி தர்மசாலா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பும்ரா சென்றுள்ளதால் அவருக்கு பதிலாக ஹர்சித் ராணாவும் உடல்நலக் குறைவு காரணமாக அக்ஷர் படேல் பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. ஹென்ரிக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் டி காக் ஒரு ரன்னிலும் அடுத்து வந்த பிரவிஸ் 2 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 7 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
ஒரு பக்கம் விக்கெட்டை பறிக்கொடுத்தாலும் கேப்டன் ஏய்டன் மார்கரம் நிதானாமாக விளையாடி 46 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து அவுட்டானார். மார்கரமின் பொறுப்பான ஆட்டம் காரணமாக தென்னாப்பிரிக்கா 100 ரன்களை கடந்தது. இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஹர்ஸ்திப் சிங், ஹர்ஷ்சித் ராணா, குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலுக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும்.
December 14, 2025 8:47 PM IST


