அரை சதம் கடந்த அவர், 81 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை. இதனால், பாகிஸ்தான் அணி 43 ஓவரில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்ததால், 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் கிராந்தி கவுட், தீப்தி சர்மா தலா 3 விக்கெட்களும், ஸ்நே ரானா 2 விக்கெட்களும் கைப்பற்றினர்.


