Last Updated:
இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தான் விளையாடிய 6 போட்டிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் காணப்படுகிறது.
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று இறுதிப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தான் விளையாடிய 6 போட்டிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் காணப்படுகிறது.
இந்த தொடர் முழுவதுமே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி இந்தியாவை தவிர்த்து மற்ற அணிகளை விடவும் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்த நிலையில் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
டாஸ் நிகழ்வின்போது அவர் கூறுகையில், நாங்கள் தொடர்ச்சியாக முதலில் பேட்டிங் செய்து வருகிறார். இந்த மேட்ச்சில் நாங்கள் சேஸிங் செய்ய விரும்புகிறோம். கடந்த 5-6 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம் என்று கூறினார்.
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா கூறுகையில், முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறந்த ஆட்டத்தை நாங்கள் இன்னும் வெளிப்படுத்தவில்லை. இன்று அதை செய்வோம் என நம்புகிறேன். என்று கூறியுள்ளார்.
September 28, 2025 7:44 PM IST


