Last Updated:
பேட்டிங்கை பலப்படுத்த வேண்டும் என அணி விரும்பினால் ரிங்கு சிங் அல்லது ஜித்தேஷ் சர்மா களமிறங்கலாம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்த போட்டி தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் அதேபோன்று சூப்பர் ஃபோர் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறந்த பாமுடன் உள்ளது.
குறிப்பாக இன்று இறுதிப் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியை லீக் மற்றும் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய அணி மிக எளிதாக வீழ்த்தி இருந்தது. அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இன்று விளையாடும் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம்.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாத நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு திரும்புகிறார். இதேபோன்று ஆல்ரவுண்டர் சிவம் தூபே விளையாடவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த போட்டியில் விளையாடிய பவுலர் ஹர்ஷித் ரானா இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்ரவுண்டர் ஹரிதிக் பாண்டியா விளையாடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதேபோன்று அபிஷேக் சர்மாவுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் அபிஷேக் சர்மா நலமுடன் இருப்பதாக பவுலிங் பயிற்சியாளர் மார்னே மோர்க்கல் தெரிவித்திருக்கிறார்.
இன்றைய போட்டியில் விளையாடும் உத்தேச இந்திய அணி: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யா குமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.
September 28, 2025 6:05 PM IST


