Last Updated:
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசிய நிலையில், இந்தியாவின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் அதிரடியாக விளையாடியானார்.
35 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 8 சிக்சர்களை பறக்கவிட்டு, 84 ரன்கள் குவித்தார். கேப்டன் சூர்ய குமார் 32 ரன்கள் சேர்க்க, இறுதி ஓவர்களில் ரிங்கு சிங் 44 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 1 ரன்களில் 2 விக்கெட்களை இழந்தது.
எனினும், கிளென் பிலிப்ஸ் அதிரடி காட்ட, ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. சீரான இடைவெளியில் நியூசிலாந்து வீரர்கள் அவுட் ஆனதால், அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2வது டி20 போட்டி நாளை ராய்பூரில் நடைபெறுகிறது..


