Last Updated:
நியூசிலாந்து அணி 58 ரன்கள் எடுத்திருந்தபோது 3 விக்கெட் இழந்து தடுமாறியது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சம நிலையில உள்ளன.
இந்த நிலையில் இன்று 3 ஆவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் ஹென்றி நிகோல்ஸ் களம் இறங்கினர். கான்வே 5 ரன்களிலும், நிகோல்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வில் யங் 30 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
இதனால் நியூசிலாந்து அணி 58 ரன்கள் எடுத்திருந்தபோது 3 விக்கெட் இழந்து தடுமாறியது. அடுத்து இணைந்த கிளென் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிட்செல் இணை பொறுப்புடன் விளையாடி ஆட்டத்தை நியூசிலாந்து பக்கம் எடுத்துச் சென்றது.
இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 219 ரன்கள் குவித்தனர். கிளென் பிலிப்ஸ் 88 பந்துகளில் 3 சிக்சர் 9 பவுண்டரியுடன் 106 ரன்களும், டேரில் மிட்செல் 131 பந்துகளில் 137 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்தவர்களில் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 3 சிக்சர்களுடன் 18 பந்துகளில் 28 ரன்கள் சேர்க்க நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 337 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்க உள்ளனர்.


