Last Updated:
இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றிவிட்ட நிலையில், நேற்று விசாகப்பட்டினத்தில் 4வது போட்டி நடைபெற்றது.
இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றிவிட்ட நிலையில், நேற்று விசாகப்பட்டினத்தில் 4வது போட்டி நடைபெற்றது.
இந்திய அணியில் இஷான் கிஷன் நீக்கப்பட்டு, அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இந்தியா பந்து வீசிய நிலையில், நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.
டிம் செய்ஃபிரைட் 36 பந்துகளில் 62 ரன்களை விளாசினார். கான்வாய் 44 ரன்களும், டேரில் மிச்சல் 39 ரன்களும் சேர்த்தனர். அர்ஷீதீப் சிங், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களை வீழ்த்திய நிலையில், ரிங்கு சிங் 5 கேட்ச் செய்து அசத்தினார்.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. அதிரடி வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஷிபம் துபே மட்டும் சற்று தாக்குப்பிடித்து 65 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 18.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் தோல்வியடைந்தது.


