மூன்றாவது நாள் காலையின் தொடக்கத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சோயிப் பஷீர் இந்தியாவின் கடைசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய பிறகு, இங்கிலாந்து 2வது இன்னிங்ஸை தொடங்கியது. மற்றொரு தடுமாற்றமான தொடக்கத்தைப் பெற்றது என்றே கூறலாம், முதல் 10 ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது, ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரே நாளில் 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். பின்னர் குல்தீப் யாதவ் களமிறங்கினார், அஸ்வின் தனது 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார், மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஜஸ்பிரித் பும்ரா லோயர் ஆர்டரை வீழ்த்தி இங்கிலாந்தை வெறும் 195 ரன்களுக்கு சுருட்டினார். ஜடேஜா 1 விக்கெட்டை சாய்த்தார்.