
Last Updated:
சேப்பாக்கம் மைதானத்தில் 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து 165 ரன்கள் குவித்தது. இந்திய அணி 166 ரன்கள் எடுத்தால் வெற்றி. அக்ஷர் படேல், வருண் சக்கரவரத்தி தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து 165 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே 2 ஆவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும் முதல் டி20 போட்டியில் விளையாடிய நிதிஷ் குமார், ரிங்கு சிங் அணியில் இல்லை. அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜேரல் அணியில் இடம் பெற்று இருந்தனர்.
இதையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியதும் தொடக்க வீரர்களான பிலிப் சால்ட் மற்றும் பென் டாக்கட் விக்கெட்களை பறிகொடுத்தது. இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தினாலும் இங்கிலாந்து அணி அதிரடியாகவே பேட்டிங் செய்து வந்தது. இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் 45 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஒவர்கள் முடிவுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை குவித்துள்ளது.
சேப்பாக்கம் மைதானம் வழக்கம் போல் சூழலுக்கு சாதகமாகவே இருந்தது. அக்ஷர் படேல், வருண் சக்கரவரத்தி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இந்திய அணி 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. சேப்பாக்கம் மைதனாத்தில் 166 ரன்களை சேஸ் செய்வது சற்று கடினமாகவே இருக்கும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
Chennai,Tamil Nadu
January 25, 2025 8:38 PM IST

