Last Updated:
இந்திய அணி ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ஜிம் பயிற்சியில் ஈடுபட்டபோது முழங்காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இடம்பெறுவார் என சக பந்துவீச்சாளர் சிராஜ் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது. பயிற்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த சிராஜ் வேலைப்பளுவை நினைத்து கவலைப்பட்டதில்லை எனவும் தாய்நாட்டிற்காக அதிக போட்டிகளில் விளையாடுவதே தனது விருப்பம் எனவும் தெரிவித்தார். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவதே தனது நோக்கம் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய சிராஜ் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 4வது டெஸ்ட்டில் விளையாடுவார் எனவும் இருவரும் இணைந்து சிறப்பாக பந்துவீசுவோம் எனவும் உறுதியளித்தார். இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இனிவரக்கூடிய இரண்டு போட்டியிலும் வென்றால் மட்டுமே இந்தியா தொடரை கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்திய அணி ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ஜிம் பயிற்சியில் ஈடுபட்டபோது முழங்காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது. இதனால் எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் நிதிஷ் குமார் ரெட்டி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
July 22, 2025 6:57 AM IST

