Last Updated:
ஹர்ஷித் ரானா – அபிஷேக் சர்மா 6 ஆவது விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது. இதை அடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணியினர் களம் இறங்கி உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் போட்டி மழை காரணமாக முடிவு அறிவிக்கப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி மெர்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் துணை கேப்டன் கில் 5 ரன்களிலும், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 2 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும், திலக் வர்மா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். அக்சர் படேல் 7 ரன்கள் சேர்த்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்ஷித் ரானா – அபிஷேக் சர்மா 6 ஆவது விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினர். ரானா 35 ரன்களில் வெளியேறினார். அரைச்சதம் கடந்த அபிஷேக் சர்மா 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
October 31, 2025 3:54 PM IST


