Last Updated:
IND vs AFG: சென்னையில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ஹர்சித் ரானா சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், தர்மசாலா மற்றும் லக்னோவில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி, இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
காயம் காரணமாக நீண்ட நாட்களாக அணியில் இடம்பெறாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 3 ஆவது ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், முதல் இரண்டு போட்டிகளில் களமிறங்கி சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு ஓய்வு அளித்து விட்டு, மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், முதல் 2 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஹர்ஷித் ராணா பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஏற்கனவே 2 போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றவும், ஆறுதல் வெற்றி அடைய ஆப்கானிஸ்தானும் தீவிரம் காட்டும் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


