Last Updated:
பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 100 ஓவர்களுக்கும் அதிகமாக சுப்மன் கில் பேட்டிங் செய்திருக்கிறார். இந்த மாதத்தில் அவர் 406 ரன்கள் குவித்துள்ளார்.
பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரருக்கான விருது இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் வில்லுக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த திறமையை வெளிப்படுத்தும் வீரர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு Player of the Month என்ற விருதை வழங்கி வருகிறது. தற்போது இந்த விருதை பெறுவதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், நியூசிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஸ்டீவன் ஸ்மித் ஆகியோருக்கு இடையே போட்டி காணப்படுகிறது.
சுப்மன் கில்
பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 100 ஓவர்களுக்கும் அதிகமாக சுப்மன் கில் பேட்டிங் செய்திருக்கிறார். இந்த மாதத்தில் அவர் 406 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கில் 3 போட்டிகளில் 87, 60 மற்றும் 112 ரன்கள் குவித்துள்ளார். துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 101 ரன்களை சுப்மன் கில் எடுத்தார்.
கிளென் பிலிப்ஸ்
நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான கிளென் பிலிப்ஸ் பாகிஸ்தான், பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த தொடரில் அவர் 28, 20 மற்றும் 106 ரன்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து கராச்சியில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை போட்டியில் 39 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தார்.
ஸ்டீவன் ஸ்மித்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீபன் ஸ்மித் செயல்பட்டார். இலங்கையில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த தொடரில் பொறுப்பு கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் செயல்பட்டார். இதேபோன்று சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் திறமையான ஆட்டத்தை ஸ்டீவன் ஸ்மித் வெளிப்படுத்தினார்.
தற்போது பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை பெறுவதில் சுப்மன் கில், கிளென் பிலிப்ஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் சுப்மன் கில்லுக்கு விருது அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
March 07, 2025 8:28 PM IST


