Last Updated:
ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையற்ற போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டியது அவசியம் என்று ஈரான் அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்திய நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து மோடியிடம் பெசஸ்கியான் எடுத்துரைத்தார். அப்போது, ஒப்பந்தம் ஏற்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்த பிரதமர் மோடி, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியாக தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகள், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையற்ற போக்குவரத்து நடைபெறுவது இந்தியாவுக்கும், உலகுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
“ஹோர்முஸ் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டியது அவசியம்” – ஈரானிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!


