பொதுவாக, இந்தியாவை விட துபாயில் தங்கம் விலை குறைவாக இருக்கும். இதனால் இந்தியர்கள் துபாய்க்கு செல்லும்போது அதிகமாக விரும்பி வாங்கக்கூடிய பொருளாக தங்கம் உள்ளது. பெரும்பாலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ரீதியாக இந்தியர்கள் துபாய்க்கு செல்கின்றனர். அப்போது இந்தியாவை விட விலை குறைவாக இருப்பதால் அவர்கள் தங்கத்தை வாங்கி வருவார்கள். ஆனால், அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. இதை தளர்த்த மத்திய அரசிடம் இந்தியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், தற்போது அந்த வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இனி துபாயில் இருந்து இந்தியாவிற்கு எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம் என்று இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.


