அமெரிக்கா மீதான மற்றும் அமெரிக்க குடியுரிமை மீதான மோகம் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே உள்ளது.
ட்ரம்ப் பதவியேற்றதும் ஏற்படுத்தியுள்ள கெடுபிடி குடியுரிமை சட்ட மாற்றங்களால், எளிதாக அமெரிக்கா குடியுரிமையை பெற உலகம் முழுவதும் உள்ளவர்கள் நிச்சயம் தங்களது முதலீடுகளை அமெரிக்காவில் செய்வார்கள்.
இதனால், ட்ரம்ப் கூறியிருப்பதுப்போல புதிய முதலீடுகள் அமெரிக்காவிற்குள் செல்லும்போது அங்கே புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பின்னர், முதலீடு, வேலைவாய்ப்பு என்று வந்த உடன், வரி தானாக சென்று அமெரிக்க கருவூலத்தை சேரும்.

எந்தவொரு சாதாரண குடிமகனாலும் இவ்வளவு பெரிய தொகையை அமெரிக்காவில் முதலீடு செய்ய முடியாது. ஆக, இந்தத் திட்டம் சாதாரண குடிமக்களுக்கானது அல்ல. இது முழுக்க முழுக்க பணக்காரர்களுக்கானது ஆகும்.
ஒருவர் ஒருமுறை அமெரிக்காவில் முதலீடு செய்து குடியுரிமையை பெற்றுவிட்டால் அவர்கள் திரும்ப திரும்ப தங்களது முதலீட்டுகளை அமெரிக்காவில் குவிப்பார்கள். இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிளஸாக அமையும்.
இன்னொரு பக்கம், கோல்ட் கார்டு திட்டம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தைப் பற்றி எதுவும் பேசாததால், இது அமெரிக்காவில் வேலைவாய்ப்பை நிச்சயம் உருவாக்குமா என்பதில் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.

