இது தொடர்பான விசாரணையில், மன அழுத்ததுக்கு வழக்கமாக எடுக்கும் மருந்தளவைவிட அதிகமான மருந்து அவரின் உடலில் இருந்தது. அது வேறொரு மூலத்திலிருந்து எடுத்திருக்க வேண்டும் என சந்தேகித்தனர். இதற்கிடையில், லாஸ் ஏஞ்ஜெல்ஸில், நடிகை புரோக் முல்லரை (Brooke Mueller) விசாரணை வளையத்துக்குள் காவல்துறையினர் கொண்டுவந்தனர். அவரிடமிருந்து ஒரு ஐபோன், லேப்டாப் ஆகியவற்றைக் கைப்பற்றினர். அவரிடம் விசாரிப்பட்டு வருகிறது. ஆனால், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். அதே நேரம், புரோக் முல்லர், “நான் எதற்காக விசாரிக்கப்படுகிறேன் என்பதே தெரியவில்லை. எனக்கும், மேத்யூ பெர்ரியின் மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், மேத்யூ பெர்ரியின் கொலை வழக்கில், அவருடைய பிரபல நண்பர் ஒருவர் சிக்கியிருப்பதாக டச் அவுட்லெட் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேத்யூ பெர்ரியின் கொலை வழக்கில் இரண்டாவது பிரபலம் சிக்கியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. இந்த வழக்கில் சிக்கியிருக்கும் இரண்டாவது நபரும், மேத்யூ பெர்ரியும் அவர்களின் வாழ்க்கைப் பற்றியும், போதைப்பொருள் குறித்தும் பேசிக்கொள்ளும் குறுஞ்செய்திகள் குறித்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், அந்த இரண்டாம் நபர் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

