Last Updated:
Flower Market Price List: பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு மார்க்கெட்டுகளில் பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது.
தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரத்தைப் பங்குனி உத்திரம் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். குலதெய்வ வழிபாட்டிற்குப் பிரசித்தி பெற்ற இந்த பங்குனி உத்திரம் நாளை நடைபெறுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாகப் பிச்சி பூ மற்றும் கனகாம்பரம் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. பிச்சிப்பூ சீசன் முடிந்துவிட்டதால் பிச்சிப்பூ வரத்து குறைந்து காணப்படுகிறது. அதனால் பிச்சிப்பூவின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்களானது செட்டிலம்பட்டி, ஓட்டப்பிடாரம், பேரூரணி, குலசேகரநல்லூர், ஆரைக்குளம், புதியம்புத்தூர், ஓசனூத்து, செவல்குளம், மணியாச்சி போன்ற சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.
இதையும் படிங்க: 1st Vinayagar Temple: முழுமுதற் கடவுளின் முதல் கோவில்… பாண்டிய மன்னனின் யாகத்தில் அமர்ந்த விநாயகர்…
மேலும் பிச்சிப்பூ ஆனது திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை நிலவரம் குறித்து வியாபாரி கூறுகையில், “பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. மல்லிப்பூ கிலோ 800 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது.
பிச்சிப்பூ கிலோ 2000 ரூபாய் வரை விற்பனை ஆகின்றது. சென்ட் பூ கிலோ 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பன்னீர் ரோஜா கிலோ 300 ரூபாய், பட்டன் ரோஜா கிலோ 200 ரூபாய், கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய் வரை விற்பனையாகின்றது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
April 10, 2025 2:31 PM IST

